லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லைகா நிறுவனத்துக்கு நடிகர் விஷால் வழங்க வேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் செலுத்தியது.

கடன் தொகையை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டது.

ஒப்பந்தத்தை மீறிப் படங்களை வெளியிட்டதாகவும், பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் விஷால் தரப்பு திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். நடிகர் விஷால் தன்னை திவாலானவர் என அறிவிக்கத் தயாராக இருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கில் 10 கோடி ரூபாய் ரொக்கத்தை டெபாசிட் செய்யவும் விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

மேலும், விஷால் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவிற்கும் இடைக்கால தடைவிதித்து ஆணையிட்டனர்.

Tags: நடிகர் விஷால்Madras High Court issues interim stay on order to return money to Lyca with interest from actor Vishal
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : 2 தனியார் பேருந்து நேருக்கு மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு!

Next Post

சிவகங்கையில் கனமழை : வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பொருட்கள் சேதம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies