விஷ காளான் சாப்பிட்டதால் பிரிக்கப்பட்ட குடும்பம் : தவியாய் தவிக்கும் பெற்றோர்!
Jan 14, 2026, 12:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விஷ காளான் சாப்பிட்டதால் பிரிக்கப்பட்ட குடும்பம் : தவியாய் தவிக்கும் பெற்றோர்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இத்தாலியில் மலையடிவார பகுதியில் வசித்து வந்த பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சாமானியர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இத்தாலியில் உள்ள அப்ருஷோ மலையடிவார பகுதியில் பிரிட்டனை சேர்ந்த நாதன் ட்ராவலியான் – ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேத்தரின் பர்மங்காம் தம்பதி, மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். தங்கள் குழந்தைகள் இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து வளர வேண்டும் என்பது நாதன் – கேத்தரின் தம்பதியின் ஆசை. இதற்காக, தாங்கள் வசிக்கும் வீட்டை, நகர்ப்புறங்களில் உள்ளது போல் இல்லாமல், வனப்பகுதிக்கு ஏற்றார் போல் கட்டியிருந்தனர்.

வீட்டிற்குள் ATTACHED BATHROOM என்பதே இருக்காது. வெளியே கட்டியுள்ள கழிவறையை தான் பயன்படுத்த வேண்டும். வீட்டின் அருகே வெட்டப்பட்டுள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்து தான், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். சூரிய மின்சக்தி பயன்பாடு, விறகுகளை எரித்துக் குளிர் காய்வது என அத்தனையிலும் இயற்கையை சார்தே வாழ்ந்து வந்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தாங்களே ஆசிரியராக மாறி நாதன் – கேத்தரின் தம்பதி பாடங்களை கற்பித்து வந்தனர் . அந்த அளவுக்குச் சமூகத்திடம் இருந்து அவர்கள் விலகியிருந்தனர்.

கல்வி விஷயத்தில் விமர்சனங்கள் இருந்தாலும், இயற்கையான சூழலில் வாழும் நாதன் – கேத்தரின் குடும்பத்தின் வாழ்வியல் முறை இணையத்தில், பல பாராட்டுகளை பெற்றன. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை… குழந்தைகளை பிரிந்து வாழும் கொடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் நாதன் – கேத்தரின் தம்பதி. விஷக்காளானை சாப்பிட்டதன் விளைவு இன்று அந்தக் குடும்பமே பிரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு வீட்டை ஒட்டிய வனப்பகுதியில் முளைத்திருந்த விஷக்காளானை சாப்பிட்டு, ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக அடிக்கடி வீட்டிற்கு சென்று அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், நாதன் – கேத்தரின் தம்பதி செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து, புரிதல் இல்லாத பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில், சுகாதாரத்துறையின் வாதம் வெற்றி பெற்றது. இதனால், நாதன் – கேத்தரின் தம்பதியிடம் இருந்த பிரிக்கப்பட்ட குழந்தைகள், வாஸ்டோ நகரில் உள்ள பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர். தாய் கேத்தரினும் கூடவே அழைத்து செல்லப்பட்ட போதும், குழந்தைகளை சந்திக்க அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதாம். இதனால், தங்களின் உரிமை முற்றிலும் மறுக்கப்படுவதாக நாதன் – கேத்தரின் தம்பதி குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்ட சம்பவத்தில் இத்தாலி மக்களுக்கே உடன்பாடு இருப்பதாக தெரியவில்லை. தங்கள் நாட்டை நம்பி வந்து, அமைதியான முறையில் வாழ்பவர்களை வஞ்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல எனப் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மெலோனிக்கும் நீதிமன்ற உத்தரவில் உடன்பாடு இல்லாததால், அங்கு அதிகார மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. ஒருபுறம் ஆதவுக்குரல் எழுந்தாலும், நாதன் – கேத்தரின் தம்பதியினரின் பிடிவாதம், அவர்கள் குடும்ப நலனுக்கு நல்லதல்ல என்ற எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறது. ஐரோப்பா முழுவதும் இந்த விவகாரம் கவனம் பெற்றிருக்கும் நிலையில், குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Tags: பிரிக்கப்பட்ட குடும்பம்Italyஇத்தாலிபெற்றோர்Family separated after eating poisonous mushrooms: Parents in distressவிஷ காளான்
ShareTweetSendShare
Previous Post

அரூரில் வெள்ளப்பெருக்கு : கயிறுக் கட்டி ஆற்றைக் கடக்கும் மக்கள்!

Next Post

வாக்காளர்களை காரணமின்றி நீக்க முடியாது : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies