ஈரோட்டில் துரித உணவகத்தில் வாங்கிய சிக்கன் பர்க்கரில் காப்பர் கம்பி இருந்தது குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள வணிக வளாகத்தில் துரித உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்குக் கோகிலா செல்வி என்பவர் 2 சிக்கன் பர்க்கர் வாங்கி குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்.
அப்போது அதில் சிறு துண்டுகளாகக் கம்பிகள் இருக்கவே, அவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கடையை மூடி விற்பனையை தடை செய்தனர்.
















