பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் வெளியிட்டுள்ள தகவலில், மென்பொருள் நிறுவன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள், கல்லுாரி மாணவர்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகம் குறிவைக்கின்றனர் என்றும், சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்குப் போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச கடத்தல்காரர்கள் பல அடுக்குகளாக செயல்படுகின்றனர் என்றும், சென்னையில் ஹோட்டல், பப், ரிசார்ட், பீச் வில்லா போன்றவற்றுக்கு அடிக்கடி வருவோரை குறிவைத்து போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வாயிலாக கிடைக்கும் பணம் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நக்சலைட்டுகள் போதைப்பொருள் கடத்தியதாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
















