வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - சி.பி.ராதாகிருஷ்ணன்
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு துணை தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்கு இருந்த தடை நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெண்கள் அதிகாரமளிப்புச் சட்டத்தின் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழில் பேச்சை தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு அதிகளவில் வாக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டினார்.

நமது அரசியலமைப்பு சட்டமும், பாரதமும் என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமூக நீதி, பின்தங்கிய வகுப்பினருக்கு பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நமது உறுதிப்பாட்டை அரசியலமைப்பு சட்டம் பிரதிபலிப்பதாகவும், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், உலகளவில் மாறிவரும் நீதித்துறை, நிதித்துறை உள்ளிட்டவற்றில் சீர்திருத்தம் மேற்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: We should all work together towards the goal of a developed India - C.P. Radhakrishnanகுடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ShareTweetSendShare
Previous Post

 20 லட்சம் வாக்காளர்களுக்கு படிவங்களை கொடுக்க முடியாமல் அவதிப்படும் அலுவலர்கள்!

Next Post

பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது – பிரதமர் மோடி

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies