வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - சி.பி.ராதாகிருஷ்ணன்
May 10, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு துணை தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்கு இருந்த தடை நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெண்கள் அதிகாரமளிப்புச் சட்டத்தின் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழில் பேச்சை தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு அதிகளவில் வாக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டினார்.

நமது அரசியலமைப்பு சட்டமும், பாரதமும் என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமூக நீதி, பின்தங்கிய வகுப்பினருக்கு பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நமது உறுதிப்பாட்டை அரசியலமைப்பு சட்டம் பிரதிபலிப்பதாகவும், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், உலகளவில் மாறிவரும் நீதித்துறை, நிதித்துறை உள்ளிட்டவற்றில் சீர்திருத்தம் மேற்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: We should all work together towards the goal of a developed India - C.P. Radhakrishnanகுடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ShareTweetSendShare
Previous Post

 20 லட்சம் வாக்காளர்களுக்கு படிவங்களை கொடுக்க முடியாமல் அவதிப்படும் அலுவலர்கள்!

Next Post

பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது – பிரதமர் மோடி

Related News

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமனம்!

முதல்வராக பதவியேற்ற விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து!

தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம்!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு – ஆனந்த கண்ணீரில் பெற்றோர்!

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

முதல்வராக பதவியேற்கும் விஜய் – உத்தேச அமைச்சரவை பட்டியல்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை – மு.க.ஸ்டாலின் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies