நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. சுமார் 11 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர உதவும் இந்தாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு, மே 3ம் தேதி நடந்தது. இதில் வினாத்தாள் கசிவு காரணமாக, ஜூன் 21ம் தேதி மறு தேர்வு நடந்தது.இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்டது.
இந்தத் தேர்வில் 11.21 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 56.8% பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 55.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவின் பன்ஷூல் ஆகியோர் 720க்கு 715 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் எடுத்துள்ளார்.
138 பேர் 690 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அதில் 93 சதவீதம் பேர் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றனர். 19 பேர் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் 1,492 பேர் 659க்கு அதிகமாகவும், 10,160 பேர் 600க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 500க்கு மேல் 90,780 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 1.7 லட்சம் பேரும், குறைவாக லட்சத்தீவு 43 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
















