விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த மாவட்ட கழக இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஆனந்தி, மாவட்ட கழக பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட 11 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, விழுப்புரம் மாவட்ட அதிமுக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.
















