நாடு முழுவதும் 9,911 எம்பிபிஎஸ் இடங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் புதிய மருத்துவ கல்லுாரிக்கான அனுமதி மற்றும் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்புக்கான அறிவிப்பை, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுதும், 441 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,111 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், 382 தனியார் கல்லுாரிகளில், 7,800 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 25 புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
823 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 9,911 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 36,939 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, தலா, 50 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தமாக, 78 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 950 இடங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது 13,999 இடங்கள் உள்ளன.
















