நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரி வர்மன் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில், 3வது நாளாக அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி சபரி வர்மன் உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், 19 இடங்களில் உடலில் காயம் இருப்பது தெரியவந்தது. சிறைத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சபரி வர்மனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ஈத்தங்காடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















