நாடு முழுவதும் முறைகேடுகள் தொடர்பாக எழுந்து புகாரில் 81 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில், அமலாக்கத் துறை பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் புகார்களுக்கு உள்ளாகும் நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதும் குற்றங்கள் நிரூபணம் ஆகாத பட்சத்தில் அதனை விடுவிப்பதும் அமலாக்கத்துறையின் அதிகாரத்தில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2025 – 26ம் நிதி ஆண்டில் நாடு முழுதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அதில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், திவால் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















