ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என புகழப்படும் இனிய குரலுக்கு சொந்தக்காரர் ஜானகி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது என்றும் அன்னாரின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறவும், அவரது குடும்பத்தினர் இந்தத் துக்கத்திலிருந்து விரைவில் மீண்டு வரவும் வேண்டி இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
















