வியட்நாம் படகு விபத்து - தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!
Aug 26, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 12, 2026, 05:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ள ஹான் மே ரூட் ங்வோய் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில், திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பு நகரை சேர்ந்த அழகுராஜன், ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி, பீமநகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகியோரும், சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.மேலும், தருமபுரி, பழனியைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர்

படகு விபத்தில் லாவா மொபைல் நிறுவன ஊழியர்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறந்த வணிக செயல்பாட்டிற்காக லாவா மொபைல் நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது..

இதுதவிர ஆந்திராவை சேர்ந்த 3 பேர், கேரளாவை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 15 இந்தியர்கள் வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வியட்நாமில் இந்தியர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்தியர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகமும், துணைத் தூதரகமும் அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வியட்நாம் படகு விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள ஹெல்ப் லைன் எண்களில் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வருவதற்காக, சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமானி ஐபிஎஸ்-ஐ தமிழ்நாடு அரசு வியட்நாமுக்கு அனுப்பியுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி, வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்துடன் இணைந்து உடல்களை மீட்கும் நடவடிக்கைகளையும், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை கிடைப்பதையும் டிஐஜி ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: vietnam boat accident victimvietnam boat accident reasonvietnam tourist boat accidenttourist boat accident in vietnamtamilnadu tourist 10 deadvietnam boat accidentvietnam boat accident newsboat accident in vietnamvietnam boat accident today
Share
Tweet
SendShare
Previous Post

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies