H-1B முதல் GREEN CARD வரை....விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? - சிறப்பு தொகுப்பு!
Jul 11, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2026, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் ஆகஸ்ட் முதல் H-1B விசா, மாணவர் விசா மற்றும் கிரீன் கார்டு நடைமுறைகளில் கடுமையான விதிகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் இந்தியர்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, தொழிலாளர் துறை மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவை ‘ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை நிகழ்ச்சி நிரலின்’ (Unified Regulatory Agendas) ஒரு பகுதியாக சில பரிந்துரைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாட்டுத் தொழில்முறை நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அமெரிக்கக் குடியேற்ற நடைமுறைகளைக் கடினமாக்கும் வகையிலான புதிய குடியேற்ற விதிமுறைகளை அதிபர் ட்ரம்ப் அரசு தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்கள், வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டு விண்ணப்பம் செய்து விட்டு காத்திருப்பவர்கள் என சர்வதேச மாணவர்களில் இந்தியர்களே பெரும் எண்ணிக்கையில் இருப்பதால், அதிகம் பாதிப்பு இந்தியர்களுக்கு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

H-1B விசாவைப் பொறுத்தவரை தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் H-1B உச்சவரம்பு விலக்குகள் இனி குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் தளங்களில் H-1B ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்குக் கடுமையான நிபந்தனைகள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே H-1B விதிமீறல் வரலாற்றைக் கொண்ட நிறுவனங்கள் மீதான கண்காணிப்பும் நடவடிக்கையும் தீவிரமாகும் என்று தெரிய வருகிறது.

மேலும் குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில், தற்போதுள்ள கூடுதல் கட்டண முறையை விரிவுபடுத்தவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) திட்டமிட்டுள்ளது.

இதனால் இந்தியத் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டுகளுக்கு வெளிநாட்டுப் பணியாளர்களைப் பரிந்துரைப்பதற்கான செலவை அதிகரிக்கக்கூடிய மாற்றங்களையும் தொழிலாளர் துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, H-1B மற்றும் PERM தொழிலாளர் சான்றளிப்பு நடைமுறைகளுக்குப் பயன்படுத்தப்படும் தற்போதைய ஊதிய அளவுகளை மாற்றியமைக்கவும் அத்துறை உத்தேசித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பரிமாற்றத் திட்ட வருகையாளர்களுக்கான (exchange visitors) தற்போதைய “அந்தஸ்தின் கால அளவு” (duration of status) முறையை முடிவுக்குக் கொண்டுவர DHS திட்டமிட்டுள்ளது.

2024-25 கல்வியாண்டில் இந்தியா சுமார் 3.6 லட்சம் மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது இதன் மூலம் சர்வதேச மாணவர்களை அனுப்பும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இனி அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட கால அளவிலான தங்கும் அனுமதியே வழங்கப்படும் என்றும், அந்தக் கால அளவு முடிந்ததும்,அமெரிக்காவில் தொடர்ந்து கல்வி பயிலவோ அல்லது நாட்டில் தங்கியிருக்கவோ கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவில் பணி அனுபவம் பெற அனுமதிக்கும் இரண்டு ஆண்டு STEM OPT நீட்டிப்பு மற்றும் பாடத்திட்ட நடைமுறைப் பயிற்சி, விருப்ப நடைமுறைப் பயிற்சி தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு இடைக்கால விதியின் கீழ் வழங்கப்பட்டு வந்த தானியங்கி நீட்டிப்புகள் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த மாற்றம் H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களாக H-4 விசா வைத்திருப்பவர்களைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

H-4 விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலோர், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

புதுப்பித்தல் விண்ணப்பங்களை காலாவதியாவதற்கு 180 நாட்கள் வரை தாக்கல் செய்ய முடிந்தாலும், செயலாக்க நேரங்கள் விண்ணப்பதாரர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும் வேலை அங்கீகாரம் இல்லாமல் விட்டுவிடக்கூடும்.

தற்போதைக்கு, இந்த முன்மொழிவுகள் சட்டமாகவில்லை.என்றாலும் அதிபர் ட்ரம்பின் அரசு கடுமையான குடியேற்றக் கொள்கைகளை அமல்படுத்த உள்ளதையே இந்த முன்மொழிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Tags: Green Card proceduresus visaUnified Regulatory AgendasH-1B visa holdersamericaTrumpH-1B visasUS Department of Homeland Security
ShareTweetSendShare
Previous Post

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

Next Post

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

Related News

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

பலுசிஸ்தான் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது : பாகிஸ்தான் அரசு மீது எதிர்கட்சிகள் பாய்ச்சல் – சிறப்பு கட்டுரை!

சென்னை தேனாம்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை – பொதுமக்கள் அவதி!

அரசுப் பேருந்தில் 5 கி.மீட்டர் சுற்றி சென்று கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர் – நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்!

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies