H-1B முதல் GREEN CARD வரை....விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? - சிறப்பு தொகுப்பு!
Aug 26, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் ஆகஸ்ட் முதல் H-1B விசா, மாணவர் விசா மற்றும் கிரீன் கார்டு நடைமுறைகளில் கடுமையான விதிகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் இந்தியர்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, தொழிலாளர் துறை மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவை ‘ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை நிகழ்ச்சி நிரலின்’ (Unified Regulatory Agendas) ஒரு பகுதியாக சில பரிந்துரைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாட்டுத் தொழில்முறை நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அமெரிக்கக் குடியேற்ற நடைமுறைகளைக் கடினமாக்கும் வகையிலான புதிய குடியேற்ற விதிமுறைகளை அதிபர் ட்ரம்ப் அரசு தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்கள், வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டு விண்ணப்பம் செய்து விட்டு காத்திருப்பவர்கள் என சர்வதேச மாணவர்களில் இந்தியர்களே பெரும் எண்ணிக்கையில் இருப்பதால், அதிகம் பாதிப்பு இந்தியர்களுக்கு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

H-1B விசாவைப் பொறுத்தவரை தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் H-1B உச்சவரம்பு விலக்குகள் இனி குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் தளங்களில் H-1B ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்குக் கடுமையான நிபந்தனைகள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே H-1B விதிமீறல் வரலாற்றைக் கொண்ட நிறுவனங்கள் மீதான கண்காணிப்பும் நடவடிக்கையும் தீவிரமாகும் என்று தெரிய வருகிறது.

மேலும் குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில், தற்போதுள்ள கூடுதல் கட்டண முறையை விரிவுபடுத்தவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) திட்டமிட்டுள்ளது.

இதனால் இந்தியத் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டுகளுக்கு வெளிநாட்டுப் பணியாளர்களைப் பரிந்துரைப்பதற்கான செலவை அதிகரிக்கக்கூடிய மாற்றங்களையும் தொழிலாளர் துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, H-1B மற்றும் PERM தொழிலாளர் சான்றளிப்பு நடைமுறைகளுக்குப் பயன்படுத்தப்படும் தற்போதைய ஊதிய அளவுகளை மாற்றியமைக்கவும் அத்துறை உத்தேசித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பரிமாற்றத் திட்ட வருகையாளர்களுக்கான (exchange visitors) தற்போதைய “அந்தஸ்தின் கால அளவு” (duration of status) முறையை முடிவுக்குக் கொண்டுவர DHS திட்டமிட்டுள்ளது.

2024-25 கல்வியாண்டில் இந்தியா சுமார் 3.6 லட்சம் மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது இதன் மூலம் சர்வதேச மாணவர்களை அனுப்பும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இனி அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட கால அளவிலான தங்கும் அனுமதியே வழங்கப்படும் என்றும், அந்தக் கால அளவு முடிந்ததும்,அமெரிக்காவில் தொடர்ந்து கல்வி பயிலவோ அல்லது நாட்டில் தங்கியிருக்கவோ கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவில் பணி அனுபவம் பெற அனுமதிக்கும் இரண்டு ஆண்டு STEM OPT நீட்டிப்பு மற்றும் பாடத்திட்ட நடைமுறைப் பயிற்சி, விருப்ப நடைமுறைப் பயிற்சி தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு இடைக்கால விதியின் கீழ் வழங்கப்பட்டு வந்த தானியங்கி நீட்டிப்புகள் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த மாற்றம் H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களாக H-4 விசா வைத்திருப்பவர்களைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

H-4 விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலோர், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

புதுப்பித்தல் விண்ணப்பங்களை காலாவதியாவதற்கு 180 நாட்கள் வரை தாக்கல் செய்ய முடிந்தாலும், செயலாக்க நேரங்கள் விண்ணப்பதாரர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும் வேலை அங்கீகாரம் இல்லாமல் விட்டுவிடக்கூடும்.

தற்போதைக்கு, இந்த முன்மொழிவுகள் சட்டமாகவில்லை.என்றாலும் அதிபர் ட்ரம்பின் அரசு கடுமையான குடியேற்றக் கொள்கைகளை அமல்படுத்த உள்ளதையே இந்த முன்மொழிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Tags: Green Card proceduresus visaUnified Regulatory AgendasH-1B visa holdersamericaTrumpH-1B visasUS Department of Homeland Security
Share
Tweet
SendShare
Previous Post

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Next Post

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies