கரூரில் கோயில் நில விவகாரத்தில் தமிழக அரசு மோசடி செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியள்ளார்.
கோவை பீளமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் 3,085 ஏக்கர் நிலம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் இணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் அவசரமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
பொதுச் சொத்துகளை தனிநபர்களுக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பின்னர், கோவில் நிலங்களை மீட்க பாஜக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கியிருப்பது தவறு அல்ல என்றாலும், வாரிசுரிமை மற்றும் மூத்தத்துவ அடிப்படையில் முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.
















