இந்தியாவை ஊடுருவலற்ற நாடாக மாற்ற வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ‘நில எல்லை மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு 2026’ இல் உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்தார்.
எல்லையோரப் பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவலால் ஏற்படும் அசாதாரண மக்கள் தொகை மாற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக மத்திய அரசு முழுமையான வெற்றி பெறும் என்றும் உறுதியளித்தார்.
















