காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களைப் பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடலாம் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டி அளித்த அவர், காவிரி விவகாரத்தில் இவ்வளவு மோசமான நிலை ஏற்படுவதற்கு காரணமே திமுக செய்த துரோகங்கள்தான் என தெரிவித்துள்ளார்.
“உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை யார் அழுத்தத்தின் காரணமாக கருணாநிதி திரும்ப பெற்றார்? என்றும், அப்போதிருந்த மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே கருணாநிதி வழக்கை திரும்ப பெற்றார் என்றும் அவர் கூறினார்.
“காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களுக்கு ஒரே சாட்சி துரைமுருகன் என்றும், அவருக்கு அனைத்தும் தெரியும் என்றும் அவர் கூறினார்.
“திமுக-வின் குடும்பச் சொத்துக்கள் பெங்களூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளதாகவும், சொத்துக்களை காப்பாற்ற திமுக-வும், கருணாநிதியும் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சொத்துக்களை பாதுகாக்க தமிழகத்தின் காவிரி உரிமையை கருணாநிதி அடமானம் வைத்தார் என்றும், திமுக செய்த துரோகங்களை இன்றைய தலைமுறையினர் யாரும் மறக்கக் கூடாது என்றும் நிர்மல்குமார் தெரிவித்தார்.
















