தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழமையான சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
அரசு முறைப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோனி ஆல்பனீசை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டது.
இதன் மூலம், திருவாரூர் கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நந்தி கற்சிலை, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்ரகாளி உலோக திரிசூலம், கும்பகோணம் நாகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சுப்பிரமணியர் கற்சிலை ஆகியவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
















