கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.
கரூர் கூட்ட நெரிசலில் 36 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 31 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 17 பெண்கள் மற்றும் 14 ஆண்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஆனந்தஜோதி, நிவேதா, சங்கவி, திவ்யா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோருக்கு பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
கலைச்செல்வி, சதீஷ்குமார், அகிலா ஆகியோருக்கு மாவட்ட வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
யோகேஷ்குமார், ரகுநாதன் ஆகியோருக்கு வருவாய்த் துறை இரவுக்காவலர் பணியும், செல்வராணி என்பவருக்கு வருவாய்த் துறை மசால்ஜி பணியும் வழங்கப்பட்டுள்ளது.
மோனிஷா, சந்திரகலா, பிரபாகரன், பிரியதர்ஷினி, மல்லிகா, அஷ்வின்குமார் உள்ளிட்டோருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
சாந்தி என்பவர் பணியாற்ற முடியாத சூழல் உள்ளதால் அரசுப் பணிக்கு பதிலாக 10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது…















