வாழ்வில் மிகப்பெரிய வலியைக் கொடுத்தது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கம் தெரிவித்துள்ளார்.
கரூர் வெண்ணெய்மலையில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, முதலமைச்சருக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வெள்ளி வாளை பரிசளித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அதிக வேதனையையும், வலியையும் தந்தது என தெரிவித்தார்.
கரூர் செல்வதற்கு முன்பு கரூர் காவல்துறை எங்களை எச்சரித்து இருக்கலாம் என்றும், ஆனால் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நாடகம் ஆடி காவல்துறையினர் எங்களை கூட்டி சென்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவை அனைத்திற்கும் யார் காரணம்? யார் சொல்லி இதனை செய்தார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அண்ணா பிறந்த நாளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், தவெக ஆட்சிக்கு வந்ததும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் என்றும் அவர் கூறினார்.
பேசு பேசு என கூறிய திமுகவினர் பார்ட்டி பண்ட் என கூறியுவுடன் பேரவையில் எழுந்து ஓடிவிட்டதாக குறிப்பிட்டார்.
















