15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.
நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் 15 ஆயரித்து 37 கோடி ரூபாய் முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
இதன் மூலம் 2 ஆயிரத்து 670 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்த நிகழ்வில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















