பொதுமக்கள் வீட்டில் இருந்தே அரசு மருத்துவமனைகளில் OP சேவையை பெறும் வகையில் “நலம் AI” என்ற Whatsapp Chatbot சேவையை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் சீட்டு பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்பதைத் தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் “நலம் AI” என்ற Whatsapp Chatbot சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் தொடங்கப்பட் இந்த சேவை, படிப்படியாக மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், மேலும் இரண்டு மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்காக விண்ணப்பித்துள்ளதால் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் குறையும் என்று தெரிவித்தார்.
நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கி உள்ளதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
















