தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலகுமாறு தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில தேர்தல் ஆணையரையும் மாற்றுவதற்கான முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலகுமாறு தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு அரசு தரப்பில் அழுத்தம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக உள்ள ஜோதி நிர்மலாசாமியை பதவி விலகுமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சங்கர் ஜிவால் மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த சிவ்தாஸ் மீனா ஆகியோர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர்.
தற்போதைய மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியை மாற்றி, புதிய மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கையில் தவெக அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
















