சென்னை கே.கே.நகரில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் ரவுடி மணிகண்டன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியுடன் சுற்றிவருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனிடிப்படையில், கன்னிகாபுரம் அருகே உள்ள ரடிவு மணிகண்டன் வீட்டிற்கு காவல் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் தலைமை காவலர் நித்தியானந்தன் ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது, மதுபோதையில் காரில் வந்த மணிகண்டன், போலீசார் மீது மோத முயன்றுள்ளனர். இதனை தொடர்ந்து, ரவுடியிடம் இருந்த கத்தியை வாங்க காவலர்கள் முற்பட்டபோது காவல் உதவி ஆய்வாளர் பழனியை ரவுடி தாக்கியுள்ளார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளருக்கு, மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ரவுடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ரவுடி மணிகண்டன் மற்றும் தப்பியோடிய அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
















