பரந்தூர் விமான நிலையத்தில் ஓடுதளம் அமைக்க முடியாது என கூறப்படுவதால், மாற்று இடம் குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை GRD கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
பரந்தூர் பகுதியில் 800 முதல் 900 ஏக்கரில் நீர் நிலைகள் இருந்ததாக குறிப்பிட்ட அவர், அங்கு ரன்வே அமைக்க முடியாது என நிபுணர்கள் தெரிவிப்பதாக கூறினார். எனவே, மாற்று இடம் குறித்து பரிசீலித்து வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
















