ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், போரூர் ஹிட்டாச்சி குழுமம் மற்றும் செங்கல்பட்டு ஹிட்டாச்சி எனர்ஜி உற்பத்தி திட்ட விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்மூலம் ஆயிரம் உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும். இந்தநிகழ்வில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், ஹிட்டாச்சி நிறுவன உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















