தமிழ் இனத்தை, சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்றும் தமிழர் வட்டம் பெரிதாக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையான ‘பெட்னா’ சார்பில், நியூ ஜெர்சியில் நடந்த தமிழ் விழாவில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியாவாக இருக்கட்டும், சிங்கப்பூராக இருக்கட்டும், சாதாரணமான வியாபார நண்பர்கள் முதல், ஜனாதிபதி வரை தமிழர்கள் இருப்பதை பார்க்கிறோம் என்றார்.
நாம் தயவு செய்து, நம் தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்க கூடாது என்றும், ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது என்றும் அண்ணாமலை கூறினார். எல்லாவற்றையும் தாண்டி, தமிழர் என்கிற வட்டம் பெரிய வட்டமாக இருக்க வேண்டும் என்றும் அதில் எல்லாரும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
















