தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக போட்டியிட்டதால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், திமுக – அதிமுக கூட்டணி நிலைப்பாட்டை தடுத்ததே தாம்தான் என்றும், திமுகவிற்கு யார் துரோகம் செய்தது என்பது குறித்து மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் எனவும் கூறினார்.
திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் துரோகம் செய்துள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து திமுக தலைமையிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமை அறிவித்து விட்டது என்றும், இதுவரையிலும் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஒருபோதும் கூறியதில்லை எனவும் கூறினார்.
மேலும், தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக போட்டியிட்டதால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனவும் திருமாவளவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
















