சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய உதயநிதிக்கு அகில பாரத இந்து மகா சபா கண்டனம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் பங்கேற்று இந்துக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூடத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் சுப்பிரமணியன், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் பைபிளை பிரச்சாரம் செய்யும் வகையில் சபாநாயகர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
















