தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது எனவும், முந்தைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் அதிகரித்துள்ள குற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
பாஜக-வில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை என்றும், காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது சட்டம்-ஒழுங்கு பிரச்னையை மறைக்கும் நாடகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















