பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
மேலும், அரசு வழங்கும் ஊக்கத்தொகை 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பால் கொள்முதல் விலை உயர்வால் அரசுக்கு மாதத்திற்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 360 கோடி ரூபாயும் செலவாகும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டார்.
















