நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் பாஜக சார்பில் 160 அடி நீள பிரம்மாண்ட தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 அடி நீள தேசியக்கொடி பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, பாஜக நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றனர். தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் 160 அடி நீள தேசியக்கொடியை ஏந்தி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. சாய்பாபா கோவில் பகுதியில் தொடங்கிய பேரணி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக வடகோவையின் சிந்தாமணி பகுதியில் நிறைவடைந்தது. இதில் மாணவர்கள், பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
















