தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாட்டில் மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் சிவகுமார், கேரள முதலமைச்சர் சதீசன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் 6 மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இரவு, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வர உள்ளார்.
அங்கிருந்து மாநாடு நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு சென்று முதலமைச்சர்கள் உடனான விருந்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்றபின் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு டெல்லி திரும்புகிறார்.
















