மின்கடத்தி கொள்முதல் முறைகேடு தொடர்பாக, சென்னை, மதுரை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
2021 முதல் 2023-ம் ஆண்டு வரை 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மின்வாரியத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் இயக்குநரும், 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை மின்வாரிய பொருட்கள் மேலாண்மை தலைமை பொறியாளராக பணியாற்றியவருமான பாஸ்கரனுக்கு சொந்தமான மதுரை அவனியாபுரம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















