நெல்லை மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் பயில இடம் கிடைத்துள்ளது.
வெள்ளாங்குழியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமார் மற்றும் மங்கையர்திலகம் தம்பதியின் மகன்களான வெங்கட்ஸ்ரீ, அருண், தரண் ஆகிய மூவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இதில் வெங்கட்ஸ்ரீ 440 மதிப்பெண்களும், அவரது இரட்டை சகோதரர்களான அருண், தரண் ஆகியோர் முறையே 511 மற்றும் 494 மதிப்பெண்களும் பெற்றனர்.
இதையடுத்து வெங்கட்ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை தனியார் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மூன்று மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
















