மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
31வது தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம், சென்னை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை நடைபெறுகிறது.
காவிரிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில், இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயோன ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, எல்லைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையம் முதல் கோவளம் நட்சத்திர விடுதி வரை, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
















