மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில முதலமைச்சர்களும், தெலங்கானா சார்பில் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர். புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தென்மண்டல கவுன்சில் கூட்டத்தின் துணைத் தலைவராக முதலமைச்சர் ஜோசப் விஜய் நியமிக்கப்பட்ட நிலையில், மாநாட்டிற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
கேரளா மற்றும் ஆந்திரா மாநில முதலமைச்சர்களை அமைச்சர் நிர்மல்குமார் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இதேபோல், கர்நாடக முதலமைச்சர் மற்றும் தெலங்கானா துணை முதலமைச்சரை அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்றார்.
டீம் பாரத்’ என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
















