பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லையில் பாதிரியார் ஆப்ரகாம் கடந்த 2022-ம் ஆண்டு பிரார்த்தனைக்காக வந்த 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், பாதிரியார் ஆப்ரகாமை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஆப்ரகாம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் குமார் தீர்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கு அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்
















