சவுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவர் உயிரிழந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த மாவீரன், சங்கர், பால்ராஜ், மணிகண்டன் ஆகிய 4 மீனவர்கள் சவுதியில் தங்கி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள் மாவீரன் உள்ளிட்டோர் சென்ற படகில் கொள்ளையடிக்க முயற்சித்தபோது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் 3 பேர் சவுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கீழமூவர்கரையை சேர்ந்த சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்தோரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















