மேகதாது அணை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்தை நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனுவை வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்த அன்புமணி ராமதாஸை அமைச்சர் என்.ஆனந்த் வாசல் வரை சென்று வரவேற்றார். பின்னர், அமைச்சர் அறைக்கு சென்ற இருவரும் பொன்னாடை போர்த்தி மரியாதையை வெளிப்படுத்தினர். அப்போது மேகதாது அணை தொடர்பாக கோரிக்கை மனுவை அமைச்சர் ஆனந்திடம் பாமக எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அன்புமணி வழங்கினார்.
பின்னர் பேசிய அன்புமணி, 60 ஆண்டுகள் அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாக தவெக ஆட்சியை பார்ப்பதாக தெரிவித்தார்.
















