எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் - சிறப்பு தொகுப்பு!
Aug 21, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2026, 04:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் வாழ்வாதாரமாக திகழும் மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த தண்ணீரை நம்பித்தான் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பொன்னம்பாளையம், மூலப்பாதை, குள்ளம்பட்டி, செட்டிபட்டி, புதுப்பாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, கத்தேரி வழியாக செல்லும் கிழக்குக்கரை கால்வாய், நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம், வெப்படை வரை சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் கிளை வாய்க்கால் பகுதிகளான தண்ணிதாசனூர், ஒக்கிலிப்பட்டி, வட்ராம்பாளையம், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, மஞ்சள், பருத்தி, சோளம், மக்காச்சோளம், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கால்நடை வளர்ப்பும் இந்த பாசனத்தை நம்பியே நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் இதுவரை கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கால்வாய் முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

கிணறுகளில் நீர்மட்டமும் குறைந்து வருவதால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் நிலக்கடலை, சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. கால்நடைகளுக்கான குடிநீர் தேவையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணை நிலையை ஆய்வு செய்து, கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே கிழக்குக்கரை பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Mettur East West Bank Canalscauvery delta farmersCAUVERY DELTA DISTRICTSmettur damsalemnamakkal
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

Next Post

மேகதாது அணை விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு!

Related News

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies