எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் - சிறப்பு தொகுப்பு!
Jul 6, 2026, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2026, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் வாழ்வாதாரமாக திகழும் மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த தண்ணீரை நம்பித்தான் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பொன்னம்பாளையம், மூலப்பாதை, குள்ளம்பட்டி, செட்டிபட்டி, புதுப்பாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, கத்தேரி வழியாக செல்லும் கிழக்குக்கரை கால்வாய், நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம், வெப்படை வரை சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் கிளை வாய்க்கால் பகுதிகளான தண்ணிதாசனூர், ஒக்கிலிப்பட்டி, வட்ராம்பாளையம், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, மஞ்சள், பருத்தி, சோளம், மக்காச்சோளம், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கால்நடை வளர்ப்பும் இந்த பாசனத்தை நம்பியே நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் இதுவரை கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கால்வாய் முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

கிணறுகளில் நீர்மட்டமும் குறைந்து வருவதால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் நிலக்கடலை, சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. கால்நடைகளுக்கான குடிநீர் தேவையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணை நிலையை ஆய்வு செய்து, கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே கிழக்குக்கரை பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: mettur damsalemnamakkalMettur East West Bank Canalscauvery delta farmersCAUVERY DELTA DISTRICTS
ShareTweetSendShare
Previous Post

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

Related News

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

தமிழ் இனத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு!

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – தக்க பதிலடி கொடுத்த இந்தியா!

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் – உதயநிதிக்கு அகில பாரத இந்து மகா சபா கண்டனம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies