தஞ்சாவூரில் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், குடோனில் பணிபுரிந்த தற்காலிக பணியாளர்கள் மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்துள்ளன.
இதில், பெண் பணியாளர்கள் இருவர் சிக்கி கொண்ட நிலையில், சின்னப்பொண்ணு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த சகுந்தலா என்பவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















