50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தன் மீது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் தன் மீது கூறி வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றார். மேலும், சரவணன் கூறும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தொடர்ந்து தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
















