கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டம் கல்லடியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில், கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த 20 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் சிலர் துணிச்சலுடன் மீட்புப் பணியில் இறங்கினர். தகவலறிந்த தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பணியாளர்களை மீட்கத் தொடங்கினர். நிலச்சரிவு பகுதியில் சிக்கிய 20 தொழிலாளர்களில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
















