தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனைகளை படைக்கும் என, இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெய்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 79ஆவது ஆண்டு சர்வதேச நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 472 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெய்பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முதல் முறையாக பிரம்மாண்டமான முறையில் நீச்சல் போட்டிகள், வாட்டர் போலோ, ஸ்கூபா டைவிங் போட்டிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
கல்வித்துறையை போலவே, விளையாட்டுத்துறைக்கான ஹப்பாகவும் தமிழகம் திகழ்வதாக அவர் கூறினார். விளையாட்டுத்துறை சார்ந்த பின்னணியை கொண்ட ஆதவ் அர்ஜூனா, தமிழக விளைாயாட்டு துறையை நல்ல முறையில் வழிநடத்தி செல்வார் எனவும், ஜெய்பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
















