சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற தாரக மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். அப்போது பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்தோனேஷிய அதிபர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனது DNA-வில் இந்திய மரபணு இருப்பதைக் கண்டறிந்தேன் எனவும் ஒவ்வொரு முறையும் இந்திய இசையைக் கேட்கும் போது தனது உடல் அதற்கு தகுந்தபடி தானாகவே ஆடத் தொடங்கி விடுவதாகவும் கூறினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, DNA குறித்த அதிபர் பிரபோவோவின் பேச்சு ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் வென்றுவிட்டதாக கூறினார். இது வெறும் அறிவியல் பூர்வமான மரபணு அல்ல; இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் தொன்மையான கூட்டு பாரம்பரியத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட பலமான மரபணு எனவும் தெரிவித்தார். மேலும், சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற தாரக மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்…
மேலும், குச் குச் ஹோதா ஹை என்ற பாடல் இந்தோனேசியாவில் பிரபலமானது என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் இணைந்து கூட்டாக முன்னேறும் போது, ‘பஹுத் குச் ஹோதா ஹை’ எனக் கூறினார். நிறைய விசயங்கள் நடக்கும் என்பதை ‘பஹுத் குச் ஹோதா ஹை’ என பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்….
















