பதவி சுகத்துக்காக அதிமுகவில் விலகி தவெகவில் இணைவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தவெக ஆட்சியில் தினமும் ஏதாவது பிரச்னை வருவதாகவும் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் குற்றம்சாட்டினார். பதவி சுகத்துக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சிலர் இணைவதாகவும் அவர்களுக்கு அந்த கட்சியில் மரியாதை இருக்காது எனவும் விமர்சித்தார்.
ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனவும்
விசுவாசமான வேட்பாளர்களை பரிந்துரையுங்கள் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்ட திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தேர்தலில் ஒன்றிய செயலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற விடவில்லை எனவும் நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் கூறினர்.
















