தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை இனி வெளிப்படையாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும், அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தனியார் பள்ளிகள் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி,
தனியார் பள்ளிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரவில்லை என்றாலும், ஒழுங்குமுறைச் சட்டப்படி கட்டண விவரங்களில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் முறையாக வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
















