சேலத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைச்சர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம் அடுத்த பச்சப்பட்டி பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் சின்னதுரை என்பவர் கோயிலின் சாலையை ஆக்கிரமித்து மண்டபம் கட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் சிரமம் ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது சின்னதுரையின் மகனும் தவெக நிர்வாகியுமான கொழிஞ்சி யுவராஜ் என்பவர் பெண்களை ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது.
இதனைக் கண்டித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
















