குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜிக்கும், அசோக்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இருவருமே ஆஜராகவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹவாலா பணம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும், புலன் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் இருவருக்கும் முன்ஜாமின் வழங்கவும் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
தினமும் காலை, மாலை காவல்துறை விசாரணை அதிகாரி முன் இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.
















